புதுடெல்லி: வர்த்தகத்துறை செயலாளர் ராஜீவ் கெர் நேற்று கூறியதாவது:இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுக்கு ஏற்றுமதி 3.79 சதவீதம் அதிகரித்து 2,675 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இதன்மூலம் வர்த்தக பற்றாக்குறை 992 கோடி அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.2013&2014 நிதியாண்டில் ஏப்ரல் & ஜனவரி இடையேயான காலக்கட்டத்தில் மொத்த ஏற்றுமதியானது 5.71 சதவீதம் அதிகரித்து 25,709 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதன்படி பார்க்கும்போது, நடப்பு வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டுக்கான 32,500 கோடி அமெரிக்க டாலர் என்ற இலக்கை எளிதில் எட்டிவிடலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
ஏற்றுமதி வர்த்தகம் 5.71 சதவீதம் உயர்வு
February 12, 20140227
தொடர்புடைய செய்திகள்
March 11, 20140207
ஏழு மாதங்கள் தொடர் வளர்ச்சிக்கு பின் பிப்ரவரியில் ஏற்றுமதி 3.67 சதவீதம் சரிவு
ஏழு மாதங்கள் தொடர் வளர்ச்சிக்குப் பின் பிப்ரவரியில் சரக்குகள் ஏற்றுமதி 3.67 சதவீதம் குறைந்து 2,568 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. அமெரிக்கா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தால்
Read More August 5, 20140102
பஜாஜ் ஆட்டோவின் ஏற்றுமதி 54 சதவீதம் உயர்வு
கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஏற்றுமதி இந்த ஆண்டு ஜூலை மாதம் 54 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்தமுறை 1,10,023 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்த அந்நிறுவனம் இந்த
Read More February 4, 20140216
ஏற்றுமதி உயர்ந்ததால் வர்த்தக பற்றாக்குறை குறைந்தது
புதுடில்லி: மத்திய அரசின் நடவடிக்கைகளால், சென்ற ஜனவரியில், நாட்டின் ஏற்றுமதி, முந்தைய மாதத்தை விட, 3.79 சதவீதம் உயர்ந்து, 2,675 கோடி டாலராக (1,60,500 கோடி ரூபாய்) அதிகரித்து உள்ளது. சரிவடைந்துள்ளது: இ
Read More
Leave a Reply