நிலக்கரி சுரங்கங்களுக்கான ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், இந்திய நிறுவனங்களின் நிலக்கரி இறக்குமதி செலவினம் ரூ.18,000 கோடி அதிகரிக்க வாய்ப்புள்ளது என மேக்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த 1993-ஆம் ஆண்டிலிருந்து 2010-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என்று கூறியிருந்த உச்ச நீதிமன்றம், கடந்த புதன்கிழமையன்று 218 சுரங்கங்களில் 214 சுரங்கங்களுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதில், 40 சுரங்கங்கள் நிலக்கரி உற்பத்தி செய்து வருகின்றன. உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பால் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி செலவினம் 300 கோடி டாலர் அதிகரிக்கும் என்றும், ஜிந்தால் ஸ்டீல் மற்றும் ண்டால்கோ ஆகிய நிறுவனங்களுக்கு அதிக சுமை ஏற்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில் நிலக்கரி இறக்குமதியில் இந்தியா 3-வது இடத்தில் இருந்து வருகிறது. நிலக்கரி வளத்தைப் பொறுத்தவரை நம் நாடு 4-வது இடத்தில் உள்ளது. கடந்த நிதி ஆண்டில் ரூ.95,000 கோடி செலவில் 16.84 கோடி டன் நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்தது. நடப்பு நிதி ஆண்டில் செலவினம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒதுக்கீடுகள் ரத்து- நிலக்கரி இறக்குமதி செலவினம் அதிகரிக்கும்
September 26, 20140214

தொடர்புடைய செய்திகள்
April 11, 20140198
கடந்த நிதி ஆண்டில் 3.24 லட்சம் டன் ரப்பர் இறக்குமதி
கடந்த 2013-14-ஆம் நிதி ஆண்டில் இயற்கை ரப்பர் இறக்குமதி 49 சதவீதம் அதிகரித்து 3.24 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டில் கனமழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் ரப்பர் உற்பத்தி 7.6 சதவீதம்
Read More June 28, 20140207
சீன பால் பொருட்கள் இறக்குமதிதடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு
மத்திய அரசு, சீனாவிலிருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்து கொள்வதற்கான தடையை,மேலும் ஓராண்டிற்கு நீடித்துஉத்தரவிட்டுள்ளது.சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மற்றும் பால் பொருட்களுக்கான (பாலினா
Read More February 21, 20140202
ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி இரண்டு மடங்கு அதிகரிப்பு
சென்ற ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடும்போது, ஜனவரி மாதத்தில் ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, டிசம்பர் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 1.89 லட்சம் பீப்பாய் எண்ணெய
Read More
Leave a Reply